ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஒருவார காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்து கேட்புக் கூட்டங்களில் பெண் பீடி தொழிலாளர்கள், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள், சிறு நில உரிமையாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.